குளித்தலை அருகே மதுவிற்ற பெண் கைது

 

குளித்தலை, மார்ச் 23: ராஜேந்திரம் கிராமத்தில் மதுவிற்ற பெண்ணை குளித்தலை போலீசார் கைது செய்து, மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.கரூர் மாவட்டம் குளித்தலை அடுத்த ராஜேந்திரம் கிழக்கு தெருவை சேர்ந்தவர் பரமேஸ்வரி (50). இவர், தனது வீட்டின் அருகே சட்டவிரோதமாக மதுவிற்பனை செய்து வந்துள்ளார். தகவல் அறிந்து வந்த குளித்தலை போலீசார் மது விற்ற பரமேஸ்வரி மீது வழக்குப்பதிந்து, கைது செய்தனர். மேலும், விற்பனைக்கு வைத்திருந்த 26 மது பாட்டில்கள் பறிமுதல் செய்துள்ளனர்.

 

The post குளித்தலை அருகே மதுவிற்ற பெண் கைது appeared first on Dinakaran.

Related Stories: