குளித்தலை, மார்ச் 24: கரூர் அருகே பாதை பிரச்சினையில் பெண் மற்றும் அவரது குடும்பத்தினரை திட்டி, தாக்கி மிரட்டல் விடுத்த மூவர் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்துகின்றனர்.கரூர் மாவட்டம் குளித்தலை அருகே நங்கவரம் பேரூராட்சி மாடு விழுந்தான் பாறையைச் சேர்ந்தவர் ராணி(50). இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த முருகேசன், ஹேமமாலினி, ஆறுமுகம் ஆகியோருடன் பாதை பிரச்சினையில் முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில், கடந்த வருடம் மார்ச் 28ஆம் தேதி, மூன்று பேரும் ராணியை தகாத வார்த்தையால் திட்டியும், அவரது கணவர், மகனை கட்டையால் அடித்தும் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதுகுறித்து, ராணி குளித்தலை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அதனைத் தொடர்ந்து குளித்தலை நீதிமன்ற உத்தரவின் படி 3 பேர் மீதும் குளித்தலை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
The post கரூர் அருகே பெண்ணுக்கு மிரட்டல்: 3 பேர் மீது வழக்கு appeared first on Dinakaran.