சாலை விபத்து சிகிச்சை பலனின்றி மூதாட்டி சாவு

திருவாடானை, மார்ச் 22: திருவாடானை அருகே சிலுகவயல் பகுதியைச் சேர்ந்த காசிநாதன் மனைவி சுபலெட்சுமி (60). இவர் நேற்று முன்தினம் திருவாடானை பகுதியில் உள்ள உறவினர் இல்ல துக்க நிகழ்விற்கு செல்வதற்காக தனது மகன் பாண்டியன் என்பவருடன் பைக்கில் பின்னால் அமர்ந்து சென்றுள்ளார். அப்போது, திருச்சி – ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கற்காத்தக்குடி பேருந்து நிறுத்தம் அருகே சென்று கொண்டிருந்தபோது பைக்கில் இருந்து நிலை தடுமாறி கீழே விழுந்து படுகாயமடைந்தார். உடனடியாக அவர் மீட்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக ராமநாதபுரம் மாவட்ட தலைமை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இதுகுறித்து திருவாடானை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post சாலை விபத்து சிகிச்சை பலனின்றி மூதாட்டி சாவு appeared first on Dinakaran.

Related Stories: