மதுரைக்கு விமானத்தில் கடத்தி வரப்பட்ட 64 அரிய வகை உயிரினங்கள் பறிமுதல்: வேலூரை சேர்ந்தவர் கைது, பாங்காங்க் திருப்பி அனுப்பினர்

அவனியாபுரம்: இலங்கை தலைநகர் கொழும்புவில் இருந்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் மதுரைக்கு தினசரி இயக்கப்படுகிறது. கடந்த 19ம் தேதி கொழும்புவில் இருந்து மதுரை விமான நிலையத்திற்கு வந்த பயணிகளின் உடைமைகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனையிட்டனர். அப்போது வேலூரை சேர்ந்த சசிக்குமார் என்பவர் ெகாண்டு வந்த பெட்டியில், இந்திய வனத்துறையால் தடை செய்யப்பட்ட அரிய வகை ஆமைகள் 52, பல்லிகள் 4, குட்டி பாம்புகள் 8 என 64 வன உயிரினங்கள் இருந்ததை சுங்க இலாகாவினர் கண்டுபிடித்தனர்.

இவை அனைத்தும் தாய்லாந்து நாட்டின் பாங்காக் நகரில் இருந்து இலங்கைக்கு கொண்டு வரப்பட்டு, அங்கிருந்து மதுரைக்கு கடத்தி வரப்பட்டதும் தெரியவந்தது. இதையடுத்து சசிக்குமாரை சுங்கத்துறையினர் கைது செய்தனர். பறிமுதலான 64 அரியவகை உயிரினங்களும் இந்திய வனத்துறை சட்டத்தின் கீழ் இல்லாத உயிரினங்கள் என்பதால், எங்கிருந்து கடத்தி கொண்டு வரப்பட்டதோ, அங்கேயே திருப்பி அனுப்ப சுங்கத் துறையினர் முடிவு செய்தனர். இதன்படி, பாதுகாப்பாக பெட்டியில் அடைக்கப்பட்டு, மதுரை விமான நிலையத்தில் இருந்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் மூலம் கொழும்பு வழியாக பாங்காக்கிற்கு நேற்று பத்திரமாக அனுப்பி வைக்கப்பட்டது.

The post மதுரைக்கு விமானத்தில் கடத்தி வரப்பட்ட 64 அரிய வகை உயிரினங்கள் பறிமுதல்: வேலூரை சேர்ந்தவர் கைது, பாங்காங்க் திருப்பி அனுப்பினர் appeared first on Dinakaran.

Related Stories: