இலங்கைக்கு கடத்தப்பட்ட ரூ.9 கோடி கஞ்சா பறிமுதல்

ராமேஸ்வரம்: இலங்கை யாழ்ப்பாணம் வடக்கு கடற்கரை பகுதியில் கஞ்சா பொட்டலங்கள் பதுக்கி வைத்திருப்பதாக ராணுவ புலனாய்வு பிரிவுக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் யாழ்ப்பாணம் பருத்தித்துறை தும்பளை மூர்க்கன் கடற்கரை பகுதியில் ராணுவத்தினர் மற்றும் கடற்படையினர் சோதனை நடத்தினர். இதில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 154 பொட்டலங்களில் இருந்த 308 கிலோ கஞ்சாவை கைப்பற்றி, பிளாஸ்டிக் படகு ஒன்றையும் பறிமுதல் செய்தனர்.

கைப்பற்றப்பட்ட கஞ்சாவின் சர்வதேச மதிப்பு ரூ.9 கோடியாகும். இதனை பருத்தித்துறை போலீஸ் தலைமை அதிகாரி ஆய்வு செய்த பின்னர் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டது. போலீசாரின் விசாரணையில், தமிழக கடல் வழியாக இந்த கஞ்சா பார்சல்கள் கடத்தி வரப்பட்டது தெரிய வந்துள்ளது. இதில் தொடர்புடைய கடத்தல்காரர்கள் குறித்து பருத்தித்துறை போலீசார் ரகசிய விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post இலங்கைக்கு கடத்தப்பட்ட ரூ.9 கோடி கஞ்சா பறிமுதல் appeared first on Dinakaran.

Related Stories: