சாத்தான்குளம்: தூத்துக்குடி மாவட்டம், நாசரேத் அருகே மூக்குப்பீறியை சேர்ந்தவர் இஸ்ரேவேல் மனைவி தங்கம்மாள் (77). இவர் கடந்த 2023ல் தனது மாற்றுத்திறனாளி மகள் குளிக்கும்போது பாத்ரூமில் எட்டிப் பார்த்ததாக அதே ஊரைச் சேர்ந்த மார்ட்டின் என்ற ஜெபஸ்டின் மீது நாசரேத் காவல் நிலையத்தில் புகார் செய்தார். இதுகுறித்து நாசரேத் போலீசார் வழக்கு பதிந்து அவரை கைது செய்தனர். இந்த வழக்கை சாத்தான்குளம் குற்றவியல் நீதிமன்ற கூடுதல் பொறுப்பு நீதிபதி வரதராஜன் விசாரித்து மார்ட்டின் என்ற ஜெபஸ்டினுக்கு 15 மாதம் சிறை தண்டனையும், ரூ.20 ஆயிரம் அபராதமும் விதித்து நேற்று தீர்ப்பளித்தார். அபராத தொகை ரூ.20 ஆயிரத்தை பாதிக்கப்பட்டவருக்கு இழப்பீடாக வழங்கவும் உத்தரவிட்டார்.
The post பாத்ரூமில் எட்டி பார்த்தவருக்கு 15 மாதம் சிறை தண்டனை: ரூ.20,000 அபராதமும் விதிப்பு appeared first on Dinakaran.