சமுதாயக்கூடம் கட்டும் பணி

பட்டுக்கோட்டை, மார்ச்20: பட்டுக்கோட்டை அருகே திட்டக்குடி ஊராட்சியில் ரூ.77 லட்சம் மதிப்பீட்டில் புதிய சமுதாயக்கூடம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. விழாவில் பட்டுக்கோட்டை எம்.எல்.ஏ அண்ணாதுரை கலந்து கொண்டு புதிய சமுதாயக்கூடம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டினார்.

நிகழ்ச்சியில் தஞ்சை தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் பழனிவேல், பட்டுக்கோட்டை வடக்கு ஒன்றிய திமுக செயலாளர் பார்த்திபன், துணைச் செயலாளர் சூரப்பள்ளம் வைத்திநாதன், முன்னாள் ஊராட்சி ஒன்றியக் குழு துணைத் தலைவர் முருகானந்தம் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

The post சமுதாயக்கூடம் கட்டும் பணி appeared first on Dinakaran.

Related Stories: