உசிலம்பட்டி அருகே காரில் கஞ்சா கடத்தி வந்த பெண் உள்பட 2 பேர் கைது

உசிலம்பட்டி. மார்ச் 15: உசிலம்பட்டி அருகே காரில் கஞ்சா கடத்தி வந்த பெண் உள்ளிட்ட 2 பேரை போலீசார் கைது செய்தனர். உசிலம்பட்டி பகுதியில் திருப்பூரிலிருந்து காரில் கஞ்சா கடத்தி வருவதாக, போலீசாருக்கு நேற்று ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து உசிலம்பட்டி டிஎஸ்பி சந்திரசேகரன் உத்தரவின் பேரில் உசிலம்பட்டி நகர் காவல் நிலைய போலீசார் சீமானூத்து விலக்கு பகுதியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக சந்தேகப்படும் வகையில் வந்த கருப்பு நிற காரை தடுத்து நிறுத்தி சோதனையிட்டனர். அதில் 6 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து அதிலிருந்த பெண் உள்ளிட்ட இருவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அவர்கள் உசிலம்பட்டியை சேர்ந்த கௌசல்யா (32), திருப்பூர் மாவட்டம் நல்லூத்துப்பாளையத்தைச் சேர்ந்த உதயகுமார் (37) என்பது தெரியவந்தது. இவர்கள் திருப்பூரில் இருந்து கஞ்சா கடத்தி வந்து உசிலம்பட்டி பகுதியில் விற்பனை ெசய்வதாக கூறியுள்ளனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் இருவரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்த கார், கஞ்சா மற்றும் இரு செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

 

The post உசிலம்பட்டி அருகே காரில் கஞ்சா கடத்தி வந்த பெண் உள்பட 2 பேர் கைது appeared first on Dinakaran.

Related Stories: