திருச்சி மாநகராட்சியில் மக்கள் குறைதீர் நாள் கூட்டம்

 

திருச்சி, மார்ச் 18: திருச்சி மாநகராட்சியில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடந்தது. திருச்சி மாநகராட்சியில் மேயர் அன்பழகன் தலைமையில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடந்தது. இதில் மாநகர மக்கள் சார்பில் வழங்கப்பட்ட மனுக்களை மேயர் பெற்றுக்கொண்டார். அவற்றை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் வழங்கி உரிய நடவடிக்கை எடுக்க மேயர் அன்பழகன் அறிவுறுத்தினார்.

கூட்டத்தில் மாநகராட்சி கமிஷனர் சரவணன் துணை மேயர் திவ்யா, நகர பொறியாளர் சிவபாதம், மண்டத்தலைவர் துர்கா தேவி, விஜயலட்சுமி, நகர் நல அலுவலர் விஜய் சந்திரன், செயற்பொறியார்கள், உதவி கமிஷனர்கள் மற்றும் உதவி செயற்பொறியாளர்கள், மாநகராட்சி அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

The post திருச்சி மாநகராட்சியில் மக்கள் குறைதீர் நாள் கூட்டம் appeared first on Dinakaran.

Related Stories: