திருவாரூர், மார்ச் 18: ஒன்றிய அரசை கண்டித்து திருவாரூரில் நேற்று தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஒன்றிய அரசின் தேசிய கல்விக்கொள்கை மற்றும் மும்மொழி திணிப்பு ஆகியவற்றை கண்டித்து திருவாரூரில் நேற்று பழைய பேருந்து நிலையம் முன்பாக தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மாவட்ட தலைவர் அரவிந்தன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் சந்திரசேகரன் முன்னிலை வகித்தனர். இதில் விவசாய சங்க பொறுப்பாளர் வரதராஜன் மற்றும் கலை இலக்கிய பெருமன்ற பொறுப்பாளர்கள் சுஜாதா, தங்கபாபு, இளையகுமார், அரவிந்தன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
The post ஒன்றிய அரசை கண்டித்து தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றம் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.