கறம்பக்குடி அருகே கிணற்றுக்குள் விழுந்த ஆடு உயிருடன் மீட்பு

 

கரம்பக்குடி, மார்ச் 18: கறம்பக்குடி அருகே கிணற்றுக்குள் விழுந்த ஆடு உயிருடன் மீட்பு.புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி மலையூர் அருகே வெள்ளாள விடுதி கிராமத்தைச் சேர்ந்தவர் தினேஷ் விவசாயி இவருக்கு சொந்தமான ஆடு ஒன்று நேற்று மேய்ச்சலுக்கு சென்றபோது வழி தவறி கிணற்றுக்குள் விழுந்து விட்டது.

உடனடியாக அக்கம் பக்கத்தினர் கத்திக் கொண்டிருந்த ஆட்டை பார்த்து கறம்பக்குடி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு நிலைய அலுவலர் சிறைசீலன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று கிணற்றுக்குள் இறங்கி கத்திக் கொண்டிருந்த ஆட்டை உயிருடன் மீட்டு உரிமையாளரிடம் ஒப்படைத்தனர்.

The post கறம்பக்குடி அருகே கிணற்றுக்குள் விழுந்த ஆடு உயிருடன் மீட்பு appeared first on Dinakaran.

Related Stories: