நாகர்கோவில்: தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் கடந்த 23ம்தேதி நடைபெற்றது. இந்த நிலையில் நாகர்கோவில் மாநகராட்சி துணை மேயர் மேரி பிரின்சி லதா, வாக்கு சாவடிக்குள் அனுமதியின்றி சென்றதாக தற்போது புகார் எழுந்துள்ளது. நேசமணி நகர் காவல் நிலைய பகுதிக்கு உட்பட்ட வெட்டூர்ணிமடம் புனித அலோசியஸ் மேல்நிலைப்பள்ளி வாக்கு சாவடி எண் 151, வடசேரி காவல் நிலையத்துக்கு உட்பட்ட நாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்தவ பள்ளி வாக்கு சாவடி எண் 164, 165, ராஜாக்கமங்கலம் காவல் நிலையத்துக்கு உட்பட்ட பூச்சிவிளாகம் அரசு தொடக்கப்பள்ளி வாக்கு சாவடி எண் 32 ஆகியவற்றுக்குள் சென்று, வாக்குசாவடிகளில் வைக்கப்பட்டு இருந்த பார்வையாளர் பதிவேட்டில் ைகயெழுத்திட்டு உள்ளார். தேர்தல் அதிகாரிகள் ஆய்வையடுத்து, அந்தந்த வாக்குசாவடி அலுவலர்கள் புகார்களின்படி நேசமணிநகர், வடசேரி, ராஜாக்கமங்கலம் காவல் நிலையத்தில் துணை மேயர் மேரி பிரின்சி லதா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. நாகர்கோவில் மாநகராட்சி மேயராக இருந்த மகேஷ் ஏற்கனவே ராஜினாமா செய்துள்ள நிலையில், இவர் மேயர் (பொறுப்பு) என்ற நிலையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
நாகர்கோவில் துணை மேயர் மீது வழக்கு
- நாகர்கோவில்
- துணை மேயர்
- தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல்
- நாகர்கோவில் மாநகராட்சி
- மேரி பிரின்சி லதா
- வெட்டூர்னி மேடம்
- நேசமணிநகர்
