இந்நிலையில் என்எம்என் மருந்துகளை உட்கொள்வது உடல் நலனுக்கு நல்லது என சமந்தா இன்ஸ்டாவில் கூறியிருந்தார். இதையடுத்து அதே டாக்டரான சிரியாக், ‘‘இந்த மருந்து உட்கொள்வதற்கு உகந்தது கிடையாது என சில முக்கிய ஆன்லைன் நிறுவனங்களே விற்பனையை நிறுத்திவிட்டன. சீனாவில் இந்த மருத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பாம்பு எண்ணெய் விற்பனையாளர் போல் சமந்தாவின் செயல்கள் இருக்கின்றன’’ என தெரிவித்துள்ளார். இந்த பதிவு நெட்டிசன்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாம்பு எண்ணெய் விற்பவர் சமந்தா: சோஷியல் மீடியாவில் டாக்டர் கடும் தாக்கு
