தென்னிந்தியாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருகிறார் திரிஷா. தற்போது கமல்ஹாசனுடன் ‘தக் லைஃப்’, படத்தில் நடித்துள்ளார். அடுத்ததாக ஆர்ஜே.பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடிக்கும் ‘சூர்யா 45’ படத்திலும், தெலுங்கில் சிரஞ்சீவி நடிப்பில் உருவாகும் ‘விஸ்வம்பரா’ மற்றும் மலையாளத்தில் மோகன்லால் நடிக்கும் ‘ராம்’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார். பிஸியாக ஷூட்டிங்கில் கலந்துகொண்டு வந்தாலும், கிடைக்கும் நேரங்களில் போட்டோஷூட் செய்து பதிவிடுவது திரிஷாவின் வழக்கம். ‘தக் லைஃப்’ புரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு வரும் திரிஷா அதற்கிடையில் போட்டோஷூட் செய்து அதன் போட்டோக்களை தனது இன்ஸ்டாவில் பதிவிட்டு வருகிறார்.
அந்தவகையில், சமீபத்தில் அவர் பதிவு செய்துள்ள போட்டோ வைரலாகி வருகிறது. பெரிய ஹோட்டல்களில் லக்கேஜ்களை வைத்து எடுத்துச் செல்லப்படும் லக்கேஜ் கார்ட்டில் உட்கார்ந்து வித விதமாக போஸ் கொடுத்து போட்டோஷூட் நடத்தியுள்ளார். அந்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் போஸ்ட் செய்து, ‘‘என்னிடம் எதையாவது செய்யக்கூடாது என சொன்னால், நான் அதை இரண்டு முறை செய்து போட்டோ எடுத்துக்கொள்வேன்’’ என கேப்ஷன் போட்டுள்ளார். இதை போஸ்ட் செய்த ஒரே நாளில் பல லட்சம் லைக்குகளை அள்ளி குவித்துவருகிறது. இதை பார்த்த நெட்டிசன்கள், ‘‘திரிஷாவுக்குள் இருக்கும் சிறுமி இன்னும் அப்படியே இருக்கிறார்.
அவர் இப்படியே குழந்தை போன்று பிடித்ததை எல்லாம் செய்து சந்தோஷமாக சிரித்துக் கொண்டே இருந்தால் அதுவே எங்களுக்கு போதும்’’ என பதிவிட்டு வருகின்றனர். அப்படி திரிஷாவை லக்கேஜ் கார்ட்டில் ஏற வேண்டாம் என சொன்னது யாராக இருக்கும் என கேட்டு வருகின்றனர்.