கருப்பம்புலத்தில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவிக்கு பாராட்டு

வேதாரண்யம், மே 20: வேதாரண்யம் தாலுகா கருப்பம்புலம் அகரம் மெட்ரிக் பள்ளியில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவி மகதிக்கு பள்ளி நிர்வாகம் பாராட்டு தெரிவித்துள்ளது. வேதாரண்யம் தாலுகா கருப்பம்புலம் அகரம் மெட்ரிக் பள்ளியில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 488 மதிப்பெண் பெற்ற முதல் மாணவியான வாய்மேடு ஆசிரியர் மணிமொழி-கவிதா தம்பதியர் மகள் மகதியை அகரம் மெட்ரிக் பள்ளியின் நிறுவனரும், மயிலாடுதுறை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், வேதாரண்யம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பி.வி.இராசேந்திரன் மாணவியின் வீட்டுக்கு சென்று மகதியை ஆசிர்வாதம் செய்து வாழ்த்தினர்.

முதல் மதிப்பெண் பெற்ற மாணவியை பள்ளியின் தாளாளர் விவேக், பள்ளியின் முதல்வர் வெற்றிச்செல்வி, ஆசிரியர்கள் மற்றும் பள்ளி அலுவலர் ஜெயச்சந்திரன் ஆகியோர் பாராட்டினார்கள். மேலும் மாணவியை சொந்த ஊரான வாய்மேட்டில் கிராம மக்கள், பல்வேறு பள்ளி ஆசிரியர்கள், முக்கியபிரமுகர்கள் பாராட்டினர்.

The post கருப்பம்புலத்தில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவிக்கு பாராட்டு appeared first on Dinakaran.

Related Stories: