சிவகங்கை, மே 20: சிவகங்கை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. கடந்த பிப்ரவரி மாதம் சில நாட்கள் லேசான மழை பெய்தது. இது போல் மார்ச், ஏப்ரல் மாதங்களிலும் மழை பெய்தது. இந்நிலையில் ஆனால் மற்ற நாட்கள் கடுமையான வெயில் அடித்தது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக மாலை முதல் அதிகாலை வரை மாவட்டம் முழுவதும் மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் மாலை முதல் நேற்று அதிகாலை வரை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது. அதிகபட்சமாக காரைககுடியில் 43மி.மீ மழை பெய்தது.
திருப்பத்தூரில் 20.6 மி.மீ, சிங்கம்புணயிரில் 16.4 மி.மீ, சிவகங்கையில் 15 மி.மீ, காளையார்கோவிலில் 13.6 மி.மீ, திருப்புவனத்தில் 12.4 மி.மீ மழை பெய்தது. நேற்று பகல் முழுவதும் வெயில் இல்லாமல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. கோடை காலத்தில் பெய்யும் மழையால் சில பகுதிகளில் இடி மற்றும் மின்னல் ஏற்படுகிறது. கடும் வெயில் நேரத்தில் பெய்யும் மழையால் வெப்பத்தின் தாக்கம் குறைவதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
The post தொடர் மழையால் சிவகங்கையின் வெக்கை குறைந்தது appeared first on Dinakaran.