சாலையில் தேங்கிய கழிவுநீரை அகற்றக்கோரி சாலை மறியல்

திருப்பூர், மே 14: திருப்பூர் வஞ்சிபாளையம் ரோட்டில் உள்ள ரயில் ரோட்டிற்கு இடது புறம் அப்பல்லோ நகர், அமர்ஜோதி நகர் ஆகிய பகுதிகள் உள்ளது. இந்த பகுதிகளில் 100க்கும் மேற்பட்ட குடும்பங்களில் 500க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் ரயில் பாதையின் தரைப்பாலத்திற்குள் புகுந்து தான் இந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டும். இந்நிலையில் அப்பல்லோ நகர், அமர்ஜோதி நகருக்கு செல்லும் பிரதான சாலையில் நீண்ட நாட்களாக கழிவு குழாய் உடைப்பு ஏற்பட்டு கழிவு நீர் தேங்கியுள்ளது. இதனை சரி செய்ய வேண்டுமென அப்பகுதி பொதுமக்கள் நீண்ட நாட்களாக மாநகராட்சிக்கு கோரிக்கை வைத்து வந்தனர்.

இந்நிலையில் நீண்ட நாட்களாகியும் கழிவுநீரை அகற்றும் பணி நடைபெறாததால் அப்பகுதி பொதுமக்கள் நேற்று கவுன்சிலர் தங்கராஜ் உடன் திருப்பூர் – வஞ்சிபாளையம் ரோட்டில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இது குறித்து தகவலறிந்த 15.வேலம்பாளையம் போலீசார் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைவு வந்து கழிவு நீரை மோட்டார் மூலம் உறிஞ்சி உடைந்த கழிவு நீர் குழாயை சரி செய்வதாக கூறியதை தொடர்ந்து கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

The post சாலையில் தேங்கிய கழிவுநீரை அகற்றக்கோரி சாலை மறியல் appeared first on Dinakaran.

Related Stories: