உடுமலை, மே 17: தமிழ்நாட்டில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் நேற்று வெளியாகின. இதில் திருப்பூர் மாவட்டம் உடுமலையில் உள்ள னிவாசா வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவி திவ்யலட்சுமி 499 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்தார். பாட வாரியாக அவர் பெற்றுள்ள மதிப்பெண்கள் விவரம்: தமிழ் 99, ஆங்கிலம் 100, கணிதம் 100, அறிவியல் 100, சமூக அறிவியல் 100. மாணவர் ஜாவித் 500க்கு 497 மதிப்பெண்கள் பெற்று இரண்டாம் பிடித்துள்ளார். தமிழில் 98 மதிப்பெண்கள்,ஆங்கிலம்,கணிதம்,அறிவியல் ஆகிய 3 பாடங்களில் 100க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். சமூக அறிவியலில் 99 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.
மாணவர் ரித்வின் ராம் 500க்கு 496 மதிப்பெண்கள் பெற்று மூன்றாம் இடம் பிடித்துள்ளார். தமிழில் 98ம்,ஆங்கிலத்தில்99ம்,கணிதத்தில் 99ம், அறிவியல்,சமூக அறிவியல் பாடங்களில் நூற்றுக்கு நூறும் பெற்றுள்ளார். சாதனை படைத்த மாணவி திவ்யலட்சுமி மற்றும் மாணவர்களை பள்ளி தாளாளர் விக்னேஷ் ரங்கநாதன், இயக்குநர் தீபா, பள்ளி முதல்வர் ஜேஸ்மின் ஜேக்கப், பொறுப்பாசிரியர் ஆனந்தி, பள்ளி நிர்வாக அதிகாரி ஜவகர் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.
The post 10-ம் வகுப்பில் பொதுத்தேர்வில் உடுமலை னிவாசா பள்ளி மாணவி: 4 பாடங்களில் நூற்றுக்கு நூறு appeared first on Dinakaran.