திருப்பூர், மே 10: திருப்பூர் மத்திய பஸ் நிலையம் பகுதியை சேர்ந்தவர் சஞ்சய் (20). பெரிய கடை வீதி டூம் லைட் பகுதியை சேர்ந்த அப்துல்கலாம் (20). இவர்கள் இருவருக்கும் ஒரே பெண்ணை காதலிப்பதில் தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், மத்திய பஸ் நிலையம் அருகே நின்ற சஞ்சயை, அப்துல்கலாம் மற்றும் அவரது நண்பர்களான புஷ்பா நகரை சேர்ந்த ராகுல் (19), பெரிய கடை வீதியை சேர்ந்த இர்பான் (20), கரட்டாங்காடு பகுதியை சேர்ந்த மணி (25), பீர் பாட்டிலால் குத்தியுள்ளனர். இதில், பலத்த காயமடைந்த சஞ்சயை அருகில் உள்ளவர்கள் மீட்டு திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் திருப்பூர் தெற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து அப்துல்கலாம், ராகுல், இர்பான் மற்றும் மணி ஆகியோரை கைது செய்தனர்.
The post காதல் விவகாரத்தில் வாலிபருக்கு பீர் பாட்டில் குத்து: 4 பேர் அதிரடி கைது appeared first on Dinakaran.