அரசு கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை

திருப்பூர், மே17: திருப்பூர் மாவட்டத்தில் 7 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உள்ள பாடப்பிரிவுகளில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன. இது குறித்து கலெக்டர் கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரியில் 1008 இடங்கள், எல்ஆர்ஜி அரசு மகளிர் கல்லூரியில் 1100 இடங்கள், காங்கேயம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 410 இடங்கள்,பல்லடம் புரட்சித்தலைவி அம்மா அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 500 இடங்கள், உடுமலை அரசு கலைக்கல்லூரியில் 864 இடங்கள்,அவிநாசி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 414 இடங்கள்,தாராபுரம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 280 இடங்கள் உள்ளன.

தமிழ்நாட்டில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கு கல்வி கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.அரசு,அரசு உதவி பெறும் கல்லூரி மாணவ மாணவிகளுக்கு புதுமைப்பெண் மற்றும் தமிழ் புதல்வன் திட்டங்கள் மூலமாக 1,000 ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. நான் முதல்வன் திட்டம் மூலம் வேலை வாய்ப்புக்கான பயிற்சிகள் நடத்தப்பட்டு வேலை வாய்ப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன. மேலும் அரசால் வழங்கப்படும் கல்வி உதவித்தொகைகள் மற்றும் இலவச பேருந்து வசதிகளும் உள்ளன.

தற்போது கல்லூரிகளில் 2025-26 ஆம் கல்வி ஆண்டிற்கான இளநிலை பட்டப்படிப்பு முதலாமாண்டு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பிக்க விரும்புவோர் www.tngasa.in என்ற இணையதள முகவரியில் வருகின்ற 27ஆம் தேதி வரை பதிவு செய்யலாம். இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க இயலாத மாணவர்கள் அனைத்து அரசு கலை அறிவியல் கல்லூரியில் உள்ள சேர்க்கை உதவி மையங்கள் மூலம் விண்ணப்பிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதனை அனைத்து மாணவர்களும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post அரசு கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை appeared first on Dinakaran.

Related Stories: