திருப்பூர்,மே16: திருப்பூர், தாராபுரம் ரோட்டை சேர்ந்தவர் கருப்புசாமி (55). அரசு பஸ் கண்டக்டர். நேற்று திருப்பூரிலிருந்து அவிநாசி செல்லும் டவுன் பேருந்தில் கருப்புசாமி பணியாற்றி வந்தார். அப்போது பெண் ஒருவர் விஜிவி கார்டன் பஸ் நிறுத்தத்தில் இறங்க வேண்டுமென கூறியுள்ளார்.
அதற்கு கருப்புசாமி விஜிவி கார்டனில் பஸ் நிறுத்தாமல் அனைப்புதூரில் சென்று நிறுத்தியுள்ளார். அப்போது அதே பஸ்சில் பயணித்த அவிநாசியில் சேர்ந்த சுரேஷ் (41), திருமூர்த்தி (40) ஆகியோர் குடிபோதையில் கண்டக்டரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு தாக்குதல் நடத்தினர். இதில் காயமடைந்த கருப்புசாமி சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்த புகாரின் பேரில் திருமுருகன்பூண்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து சுரேஷ், திருமூர்த்தி ஆகியோரை கைது செய்தனர்.
The post ஸ்டாப்பில் நிறுத்தாமல் சென்றதால் ஆத்திரம்: அரசு பஸ் கண்டக்டரை தாக்கிய இருவர் கைது appeared first on Dinakaran.