செங்கல்பட்டு ரயில் நிலையம் அருகே தனியார் கம்பெனி ஊழியர் பைக் திருட்டு

 

செங்கல்பட்டு, ஏப்.28: செங்கல்பட்டு ரயில் நிலையம் அருகே நிறுத்தி வைத்து சென்ற தனியார் கம்பெனி ஊழியரின் பைக்கை மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிவுசெய்து மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
செங்கல்பட்டு அருகே உள்ள சாலவாக்கம் பகுதியை சேர்ந்தவர் ஹேமநாதன். இவர் சென்னையில் உள்ள தனியார் கம்பெனியில் பணியாற்றி வருகிறார். இவர் தினமும் செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் உள்ள ஸ்டாண்டில் பைக்கை விட்டுவிட்டு பணிக்கு செல்வது வழக்கம். இந்நிலையில், நேற்றுமுன்தினம் வேலைக்கு செல்லும்போது நேரமாகிவிட்டதால் பைக் ஸ்டாண்டில் நிறுத்துவதற்கு பதிலாக ஸ்டேஷன் அருகிலேயே பைக்கை நிறுத்திவிட்டு சென்றுவிட்டார். இதனை தொடர்ந்து, வேலை முடிந்து இரவு வந்தபோது பைக்கை காணவில்லை என்றதும் அதிர்ச்சி அடைந்தார்.
இதுகுறித்து கொடுத்த புகாரின்படி, செங்கல்பட்டு நகர போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதேபோல், ரயில் நிலையம் அருகே ஒரேநாளில் நேற்று முன்தினம் ஐந்துக்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் திருடுபோனதாக கூறப்படுகிறது.

The post செங்கல்பட்டு ரயில் நிலையம் அருகே தனியார் கம்பெனி ஊழியர் பைக் திருட்டு appeared first on Dinakaran.

Related Stories: