கஞ்சா விற்ற 2 ரவுடிகள் கைது

காஞ்சிபுரம், மார்ச் 23: காஞ்சிபுரத்தில் கஞ்சா பொருள்களை விற்பனை செய்த 2 ரவுடிகளை, சிவகாஞ்சி போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். காஞ்சிபுரம் சிவகாஞ்சி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பழைய ரயில் நிலையம் அருகில், தினந்தோறும் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில், போலீசார் பழைய ரயில் நிலையம் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது, அங்கு சந்தேகத்திற்கிடமாக நின்றுகொண்டிருந்த 2 வாலிபர்களை பிடித்து விசாரித்தனர்.

போலீசாரின் விசாரணையில் ஒருவர் காஞ்சிபுரம் ஓடை தெரு பகுதியை சேர்ந்த வசா(எ) வசந்த்(28), காமராஜர் நகரை சேர்ந்த சிகா(எ) சிகாமணி(30) என்பதும், இவர்கள் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வருவதும் தெரியவந்தது. இதையடுத்து, 2 பேரையும் கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்த சுமார் 1 கிலோ 300 கிராம் கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர். இதனைத்தொடர்ந்து, 2 பேரையும் காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். இதில், வசந்த் என்பவர் மீது 3 கொலை, 9 கொலை முயற்சி என மொத்தம் 28 வழக்குகள் நிலுவையில் உள்ளது. சிகா(எ) சிகாமணி என்பவர் மீது 1 கொலை, 3 கொலை முயற்சி என மொத்தம் 20 வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

The post கஞ்சா விற்ற 2 ரவுடிகள் கைது appeared first on Dinakaran.

Related Stories: