மாமல்லபுரத்தில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்த கடைகளுக்கு அபராதம்

மாமல்லபுரம், மார்ச் 25: தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பை மற்றும் பொருட்களை சிலர் சட்ட விரோதமாக விற்பனை செய்வதாக மாமல்லபுரம் நகராட்சி அதிகாரிகளுக்கு தொடர்ந்து புகார்கள் வந்தது. இதையடுத்து, நகராட்சி ஆணையர் சுவீதா உத்தரவின்பேரில், தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட ஒரு முறை பயன்படுத்தக் கூடிய நெகிழி (பிளாஸ்டிக்) பொருட்கள் பயன்படுத்தப்படுகிறதா? என நகராட்சி பணியாளர்கள் கிழக்கு ராஜவீதியில் பேருந்து நிலையம் அருகே கடைகள், ஓட்டல்கள், டீ கடை மற்றும் கூல்டிரிங்ஸ் மற்றும் இதர கடைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, தமிழ்நாடு அரசால் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் மற்றும் டம்ளர்கள் இருப்பது தெரியவந்தது. அதனை, அதிரடியாக பறிமுதல் செய்தனர். தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக்கை விற்பனை செய்த கடைகளுக்கு அபராதமும் விதிக்கப்பட்டது. தொடர்ந்து, இது போன்று பிளாஸ்டிக் பைகள் விற்பது தெரிந்தால், கடைகளுக்கு சீல் வைத்து சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தனர். இதையடுத்து, கடை நடத்துபவர்கள் ஓட்டல் நிர்வாகத்தினர் அனைவரும் தலா 2 குப்பை தொட்டிகள் வைக்க வேண்டும் என நகராட்சி பணியாளர்கள் அறிவுறுத்தினர்.

The post மாமல்லபுரத்தில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்த கடைகளுக்கு அபராதம் appeared first on Dinakaran.

Related Stories: