இந்நிகழ்ச்சியில், சிறப்பு அழைப்பாளர்களாக தமிழ்நாடு இந்திய தொழில் சுகாதார சங்கத்தின் முன்னாள் தலைவர் நாகராஜ், தொழில் ஆரோக்கியத்தை நிர்வகித்தல் பங்குதாரர் ஜெயராஜ், சுகாதாரம் மற்றும் குடும்ப மருத்துவ ஆலோசகர் சாரங்கதரன், திசையன் கட்டுப்பாட்டு ஆராய்ச்சி மைய மாதிரி கிராமப்புற சுகாதார ஆராய்ச்சி பிரிவு மருத்துவர் முத்து ஆகியோர் கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி நிகழ்ச்சியை தொடங்கி வைத்து .விழா மலரை வெளியிட்டனர். இதனை தொடர்ந்து மாணவ-மாணவிகள் இடையே சிறப்புரையாற்றினர்.மேலும், இந்தியா முழுவதிலுருந்தும் 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் தனது ஆராய்ச்சி கட்டுரைகளை பகிர்ந்து கொண்டனர். பங்குப்பெற்ற அனைத்து மாணவ-மாணவிகளுக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கல்லூரி நிர்வாகம் செய்திருந்தது.
The post கற்பக விநாயகா கல்லூரியில் 2 நாள் தேசிய கருத்தரங்கம் appeared first on Dinakaran.