கஞ்சா விற்ற 2 பேர் கைது

சேலம், மார்ச் 23: சேலம் எருமாபாளையம் பகுதியில் சிலர் கஞ்சா விற்பனையில் ஈடுபடுவதாக கிச்சிப்பாளையம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில், போலீசார், அப்பகுதிக்கு சென்று தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அதில், எருமாபாளையம் அய்யந்திருமாளிகையில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டிருந்த ஜெயராமன் மனைவி கந்தாயி (65), போலீஸ் பிடியில் சிக்கினார்.

அவரிடம் இருந்து ₹11 ஆயிரம் மதிப்புள்ள 1.100 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர், அவர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். இதேபோல், அம்மாபேட்டை நஞ்சம்பட்டி ரவுண்டானா பகுதியில் போலீசார், ரோந்து சுற்றி வந்தனர். அப்போது, சிறிய பொட்டலங்களில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டிருந்த சேலம் டவுன் பாண்டியராஜன் தெருவை சேர்ந்த திருநாவுக்கரசு (24) என்பவரை மடக்கி பிடித்து கைது செய்தனர். அவரிடம் இருந்து ₹900 மதிப்பிலான கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

The post கஞ்சா விற்ற 2 பேர் கைது appeared first on Dinakaran.

Related Stories: