தாரமங்கலம், மார்ச் 25: தாரமங்கலம் அருகே சிக்கம்பட்டி கிராமம், ஊராட்சி மன்ற கட்டிடம் அருகில் சிலர் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபடுவதாக, தாரமங்கலம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட நபர்களை சுற்றி வளைத்து பிடித்து போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். இதில் அதே பகுதியை சேர்ந்த செல்வம்(55), கார்த்தி(32), தனபால்(44), வேல்(50), வெங்கடேஷ்(45), வெங்கடேஷ்(40) என்பது தெரிந்தது. இதையடுத்து 6பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post சூதாடிய 6 பேர் கைது appeared first on Dinakaran.