சேலம், மார்ச் 19: சேலம் அன்னதானப்பட்டி பழனியப்பன் காலனியை சேர்ந்தவர் குமார் (48). இவர், கடந்த 15ம் தேதி மாலை 6.30 மணிக்கு நெத்திமேட்டில் உள்ள தனியார் அரிசி அரவை ஆலைக்கு, தனது எலக்ட்ரிக் பைக்கில் சென்றுள்ளார். அந்த ஆலையின் முன்பு பைக்கை நிறுத்திவிட்டு, உள்ளே சென்றுள்ளார். சிறிது நேரம் கழித்து திரும்பி வந்து பார்த்தபோது, அவரது எலக்ட்ரிக் பைக்கை மர்மநபர் திருடிச்சென்றிருப்பது தெரியவந்தது. இதுபற்றி அன்னதானப்பட்டி போலீசில், குமார் புகார் கொடுத்தார். அதில், ₹1.47 லட்சம் மதிப்புள்ள தனது எலக்ட்ரிக் பைக்கை மர்மநபர் திருடிச்சென்றுள்ளார். அதனை கண்டுபிடித்து, மீட்டு தர வேண்டும், எனக்கூறியிருந்தார். எஸ்.ஐ., அர்த்தனாரி தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தி, வழக்குப்பதிவு செய்தனர். தொடர்ந்து, பைக் திருட்டில் ஈடுபட்ட நபர் பற்றி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
The post எலக்ட்ரிக் பைக் திருட்டு appeared first on Dinakaran.