வாலிபர் மீது கல்வீசி தாக்குதல்

சேலம், மார்ச் 15: சேலம் பொன்னமாபேட்டை செங்கல்அணை ரோடு சமயபுரம் மாரியம்மன் கோயில் பகுதியை சேர்ந்தவர் பார்த்திபன்(23). இவர் நேற்றுமுன்தினம் இரவு 11.45 மணியளவில் வீட்டின் அருகே செல்போனில் பேசியபடி நடந்து சென்றுகொண்டிருந்தார். அப்போது அந்த பகுதியை சேர்ந்த குணசேகரன் என்பவர் பார்த்திபன் மீது கற்களை வீசியுள்ளார். இதில் அவருக்கு நெற்றியில் ரத்த காயம் ஏற்பட்டது. பின்னர் அவர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதுபற்றிய புகாரின் பேரில் குணசேகரனிடம் அம்மாபேட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர்.

The post வாலிபர் மீது கல்வீசி தாக்குதல் appeared first on Dinakaran.

Related Stories: