பொம்மிடி அருகே வீடு புகுந்து தம்பதி மீது தாக்குதல் போலீஸ் விசாரணை

பாப்பிரெட்டிப்பட்டி, மார்ச் 21: பாப்பிரெட்டிப்பட்டி தாலுகா பொம்மிடி அருகே பையர்நத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர் குமரேசன்(49). இவரது மனைவி முத்துலட்சுமி(43). ஊரில் கோயில் விழா நடத்துவது குறித்த ஆலோசனை கூட்டத்தில் குமரேசன் மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த பெருமாள், தங்கதுரை, ஸ்ரீதர், சிலம்பரசன் ஆகியோரிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், கடந்த 18ம் தேதி மாலை குமரேசனும், முத்துலட்சுமியும் வீட்டில் இருந்தபோது, அத்துமீறி நுழைந்த கும்பல் தகாத வார்த்தையால் திட்டி தாக்கியுள்ளனர். மேலும், அவர்களது செல்போனை பறித்து, வீட்டில் இருந்த தையல் மிஷினையும் உடைத்துள்ளனர். இதில் காயமடைந்த முத்துலட்சுமி, குமரேசன் ஆகியோர் பாப்பிரெட்டிப்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்தனர். அவர்கள் பொம்மிடி போலீசில் அளித்த புகாரின்பேரில் பெருமாள்(52), சிலம்பரசன்(29), ஸ்ரீதர்(42), தங்கதுரை(28) ஆகிய 4 பேர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இதேபோல், பெருமாள் கொடுத்த புகாரின்படி குமரேசன், முத்துலட்சுமி மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post பொம்மிடி அருகே வீடு புகுந்து தம்பதி மீது தாக்குதல் போலீஸ் விசாரணை appeared first on Dinakaran.

Related Stories: