ஆவடி, மார்ச். 23: ஆவடி பகுதியில் தொடர் செல்போன் திருட்டில் ஈடுபட்ட வாலிபரை தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர். ஆவடியை அடுத்து அயப்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் பிரகாஷ் (29), தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். நேற்று முன்தினம் இரவு மர்ம நபர் ஒருவர் அவரது வீட்டுக்குள் நுழைந்து செல்போன் திருடிக்கொண்டு தப்பிச் செல்வதை கண்டு பிரகாஷ் கூச்சலிட்டார். அப்பகுதியில் உள்ள அனைவரும் சேர்ந்து மர்ம நபரை பிடித்து தர்ம அடி கொடுத்து திருமுல்லைவாயல் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
போலீசார் அவரை காவல் நிலையம் அழைத்து விசாரணை செய்தபோது அவர் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த சாகர் பாய் (23) என்பது தெரிந்தது. இவர் அயப்பாக்கம் திருவேற்காடு மெயின் ரோட்டில் அமைந்துள்ள ஒரு கடையில் தங்கி வேலை செய்து வருகிறார். இவர் இரவு நேரங்களில் அப்பகுதியில் உள்ள வீடுகளில் செல்போன் திருடுவதை வழக்கமாக வைத்துள்ளார். அவரிடம் இருந்து ஆறு செல்போன்களை பறிமுதல் அம்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.
The post தொடர் செல்போன் திருட்டில் ஈடுபட்ட வாலிபருக்கு தர்ம அடி appeared first on Dinakaran.