கல் குவாரியில் கிரேன் கவிழ்ந்து வாலிபர் பலி

நெல்லை, மார்ச் 23: பீகார் மாநிலத்தை சேர்ந்த மன்சூல் ஹாக் மகன் சர்பரேக் ஆலம் (20). இவர், நெல்லை மாவட்டம் பழவூர் அருகேயுள்ள கல் குவாரியில் வேலை பார்த்து வந்தார். நேற்று குவாரிக்கு புதிய இயந்திரம் வந்துள்ளது. இதனை கிரேன் மூலம் தூக்கி நிறுத்தும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக கிரேன் கவிழ்ந்தது. இதில் சிக்கி கொண்ட சர்பரேக் ஆலம் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். பழவூர் போலீசார், சர்பரேக் ஆலத்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நாகர்கோவில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post கல் குவாரியில் கிரேன் கவிழ்ந்து வாலிபர் பலி appeared first on Dinakaran.

Related Stories: