பைக் விபத்தில் தொழிலாளி பலி

ஆலங்குளம், மார்ச் 23: ஆலங்குளம் அருகே ஆ. மருதப்பபுரம் பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்தவர் முத்துப்பாண்டி மகன் செல்லதுரை(50). குறிப்பன்குளத்தில் பழைய இரும்புக்கடையில் கூலி வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் இரவு ஆலங்குளம் வந்து விட்டு பைக்கில் ஊர் திரும்பிக்கொண்டிருந்தார். குறிப்பன்குளம் ஊரை கடந்து மருதப்பபுரம் செல்லும் சாலையில் விவசாயி ஒருவர் நெற்கதிர் அறுவடை முடிந்து சாலையில் காயப்போட்டு இரவு நேரத்தில் தார்பாயால் மூடி வைத்திருந்ததின் மீது பைக் மோதியது.

இதில் தூக்கி வீசப்பட்டு கீழே விழுந்த செல்லத்துரை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சம்பவம் குறித்து தகவலறிந்த ஆலங்குளம் போலீசார், உடலை கைப்பற்றி நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பிரேதபரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post பைக் விபத்தில் தொழிலாளி பலி appeared first on Dinakaran.

Related Stories: