ஆர்.கே.பேட்டை அருகே சொத்து தகராறில் 3 பேர் படுகாயம்

ஆர்.கே.பேட்டை, மார்ச் 23: ஆர்.கே.பேட்டை அருகே சொத்து பிரிக்கச்சொல்லி கேட்டபோது, உறவினர்கள் இடையே ஏற்பட்ட மோதலில், 3 பேர் படுகாயம் அடைந்தனர். ஆர்.கே.பேட்டை அடுத்த பீமாரெட்டியூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமலிங்கம் என்பவரின் மகன் தயாளன் (50). இவரது, மனைவி ஜோதி (43). இவர், கடந்த 3 மாதங்களுக்கு முன்பு கணவன் தயாளனுடன் கோபித்துக்கொண்டு, தாய் வீடான கட்டாரிகுப்பம் கிராமத்திற்குச் சென்றுவிட்டார். இந்நிலையில், நேற்று காலை தயாளன் தனது உறவினரான குமாருடன் கட்டாரிகுப்பம் கிராமத்தில் உள்ள மாமியார் வீட்டிற்குச் சென்றுள்ளார். அங்கு, மாமியார் மற்றும் மாமனாருடன் தனது மனைவிக்கு வரவேண்டிய சொத்தை பிரித்து தருமாறு கேட்டுள்ளார்.

அப்போது, அங்கு வந்த தயாளனனின் மனைவியின் தங்கை வேண்டா (33), அவரது, கணவன் நீலகண்டன் (37) ஆகியோர் சொத்தை பிரித்து கொடுக்க முடியாது எனக்கூறவே, இரு தரப்பினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்து, கத்தி மற்றும் உருட்டை கட்டையால் ஒருவரையொருவர் தாக்கிக்கொண்டனர். இதில் தயாளன், குமார், நீலகண்டன் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். இதனையடுத்து, படுகாயமடைந்த அவர்கள் சோளிங்கர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இதுகுறித்து இரு தரப்பினர் கொடுத்த புகாரின்பேரில், ஆர்.கே.பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post ஆர்.கே.பேட்டை அருகே சொத்து தகராறில் 3 பேர் படுகாயம் appeared first on Dinakaran.

Related Stories: