விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று காலை கோலாகலமாக நடந்தது. வள்ளி, தேவசேனா சமேத சுப்பிரமணியசுவாமி பட்டு உடுத்தி சிறப்பு மலர் அலங்காரத்துடன், சித்திரை தேருக்கு எழுந்தருள, அங்கு சுவாமிகளுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. இதனைத்தொடர்ந்து சிதறு தேங்காய் உடைத்து 9 மணிக்கு தேரோட்டம் துவங்கியது. பக்தர்கள் திரளாக கலந்துகொண்டு அரோகரா கோஷத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
விழாவினை முன்னிட்டு கோயில் மூலவர் சுவாமிநாதசுவாமிக்கு இன்று காலை விசேஷ அபிஷேகம் நடந்தது. மாலை தங்ககவசம், வைரவேலுடன் பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். தொடர்ந்து நாளை நடராஜர்-சிவகாமியம்மாள் மாணிக்கவாசகர் தேர்கால் பார்த்தல், ஊடல், திருவீதியுலா மற்றும் தீர்த்தவாரி நடைபெறுகிறது. 27ம் தேதி சுவாமிகள் புறப்பாடு விழா முடிந்து யதாஸ்தானம் செல்லுதல் நடைபெறுகிறது.
The post சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோயிலில் சித்திரை தேரோட்டம் கோலாகலம்: திரளான பக்தர்கள் தரிசனம் appeared first on Dinakaran.