சென்னை: 2024-25ஆம் கல்வி ஆண்டின் இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு இன்று நடைபெறுகிறது. தமிழ்நாட்டில் நீட் நுழைவுத் தேர்வை ஒன்றரை லட்சம் மாணவர்கள் எழுதுகின்றனர். அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் படித்த 12,730 மாணவர்கள் நீட் தேர்வு எழுத உள்ளனர். நீட் தேர்வு இன்று பிற்பகல் 2 மணி முதல் மாலை 5.20 மணி வரை நடைபெற உள்ளது.