நெல்லை, தென்காசியில் வெயிலுக்கு 2 பேர் பலி

நெல்லை: நெல்லை, தென்காசியில் வெயிலுக்கு மயங்கி விழுந்து 2 பேர் உயிரிழந்தனர்.நெல்லை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் சுட்டெரித்து வருகிறது. கடந்த 2 நாட்களாக 104 டிகிரியை கடந்து அனலாய் தகிக்கிறது. இந்நிலையில் வெயிலுக்கு மயங்கி விழுந்து 2 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

நெல்லை மாவட்டம் சீதபற்பநல்லூர் அடுத்த துலுக்கர்குளம் பிள்ளையார் கோயில் தெருவை சேர்ந்தவர் ராஜம்மாள்(70). நேற்று முன்தினம் வயல் வேலைக்கு சென்றிருந்த நிலையில் திடீரென மயங்கி விழுந்தார். நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர். சிகிச்சை பலனின்றி இறந்தார்.

இதேபோல் தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் லட்சுமியாபுரத்தை சேர்ந்த சலவை தொழிலாளி சண்முகையா(55), நேற்று முன்தினம் சாலையில் நடந்து சென்றபோது வெயிலின் தாக்கம் காரணமாக திடீரென மயங்கி விழுந்தார். உடனடியாக அவரை மீட்டு சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக இறந்தார்.

The post நெல்லை, தென்காசியில் வெயிலுக்கு 2 பேர் பலி appeared first on Dinakaran.

Related Stories: