மே 5-ம் தேதி வணிகர்கள் தினம்; செங்கல்பட்டில் கடைகள் அடைப்பு!

செங்கல்பட்டு: வணிகர்கள் மே 5-ம் தேதியை ஒவ்வொரு ஆண்டும் வணிகர் தினமாக கொண்டாடி வருகின்றனர். இதையொட்டி ஒவ்வொரு வணிகர் சங்கமும் தங்களது சங்க நிர்வாகிகளை திரட்டி மாநாடு நடத்துகின்றனர். வியாபாரிகளுக்கு ஏற்படும் இன்னல்கள், அதை களைவதற்கான ஏற்பாடுகள் குறித்து இதில் விரிவாக விவாதிக்கிறார்கள். அது மட்டுமின்றி வியாபாரிகளுக்கு அரசின் சார்பில் என்ன உதவி வேண்டும் என்பது பற்றியும் கோரிக்கை வைக்கின்றனர். இதற்காக வியாாரிகள் கடைகளுக்கு விடுமுறை அளித்து மாநாட்டுக்கு செல்கின்றனர்.

இதன் ஒரு பகுதியாக செங்கல்பட்டு நகரில் ராஜாஜி தெரு, மணிகூண்டு, பழைய அண்ணா சாலை, சின்னமணிக்கார தெரு, பெரிய மணிக்கார தெரு, மார்கெட், புதிய பேருந்து நிலையம், பழைய பேருந்து நிலையம், வேதாச்சலநகர், உள்ளிட்ட இடங்களில் சுமார் ஆயிரத்திற்க்கு அதிகமான கடைகள் முழுவதுமாக அடைக்கப்பட்டுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் முழுவதும் சுமார் 10 ஆயிரத்திற்க்கும் அதிகமான கடைகள் மூடப்பட்டுள்ளதாக தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு செங்கல்பட்டு மாவட்ட தலைவர் உத்திரகுமார் தெரிவித்தார்.

 

The post மே 5-ம் தேதி வணிகர்கள் தினம்; செங்கல்பட்டில் கடைகள் அடைப்பு! appeared first on Dinakaran.

Related Stories: