இந்த பாலத்திற்காக கடலில் 333 கான்கிரீட் அடித்தளங்கள், 101 தூண்கள் ஏற்கனவே அமைக்கப்பட்டு விட்டன. எதிர்கால தேவையை கருத்தில்கொண்டு இரட்டை ரயில் பாதை அமைக்கும் வகையில் அடித்தளம் மற்றும் தூண்கள் அகலமாக அமைக்கப்பட்டுள்ளன. பாலத்தின் மைய பகுதியில் பொருத்தப்பட உள்ள தூக்குப்பாலம்(லிப்டிங் கிர்டர்) பகுதி, கடலில் இறக்கப்பட்டு மெதுவாக நகர்த்தப்பட்டு வருகிறது. இதுவரை 200மீ தொலைவு நகர்த்தப்பட்டு விட்டது. மீதமுள்ள 228 மீ தொலைவில் நகர்த்தும் பணி நடைபெற்று வருகிறது. பாலத்தில் தற்போது 1.5 கிமீ நீளத்திற்கு மின் மயமாக்கல் பணிகள் முடிந்துவிட்டன. அதில் சரக்கு ரயில் சோதனை ஓட்டமும் முடிந்துவிட்டது. மீதமுள்ள 0.6 கி.மீ. ரயில் பாதையில் மின்மயமாக்கல், கிர்டர்கள் பொருத்தும் பணி தீவிரமடைந்துள்ளது. இந்தப் பணிகள் அனைத்தும் நிறைவடைந்த பிறகு, இந்த ஆண்டு இறுதியில் புதிய பாலம் திறக்கப்பட வாய்ப்புள்ளது. இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post கடலில் 2.8 கிமீ நீளத்தில் அமைக்கப்பட்டு வரும் பாம்பன் புதிய ரயில் பாலம் நடப்பாண்டு இறுதியில் திறப்பு: தெற்கு ரயில்வே அறிவிப்பு appeared first on Dinakaran.