கார், வேன் மோதி தீப்பிடித்து எரிந்தது

கோவை: கோவை மாவட்டம், சூலூர் எல் அண்ட் டி பைபாஸ் சாலை குளத்தூர் பிரிவு அருகே சொகுசு காரும், வேனும் நேருக்கு நேர் மோதியது. இதைப்பார்த்த பின்னால் வாகனங்களில் வந்தவர்கள் உடனடியாக சென்று காரில் சிக்கி இருந்த 3 வாலிபர்களை மீட்டக்கப்பட்ட நிலையில் தப்பி சென்றனர்.

வேனில் வந்த கேரள மாநிலம் பெருந்தலை மன்னா பகுதியைச் சேர்ந்தவர் சாதிக்பாஷா படுகாயமடைந்தார். அவர் அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். விபத்து நடந்த சில நிமிடங்களில் திடீரென 2 வாகனங்களும் தீப்பிடித்து எரிந்து சாம்பலானது. இதனால் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

The post கார், வேன் மோதி தீப்பிடித்து எரிந்தது appeared first on Dinakaran.

Related Stories: