சிறுபிள்ளைத்தனமான அரசியல் செய்கிறார் விஜய்: பியூஸ் கோயல் பேட்டி

 

மொடக்குறிச்சி: ஈரோடு தெற்கு மாவட்ட பாஜ., அலுவலகத்தில் நேற்று கட்சி நிர்வாகிகளுடன் ஒன்றிய தொழில் துறை அமைச்சரும், தமிழக தேர்தல் பொறுப்பாளருமான பியூஸ் கோயல் கலந்தாலோசனை நடத்தினார். பின்னர் ஒன்றிய அமைச்சர் பியூஸ்கோயல் நிருபர்களிடம் கூறியதாவது,
பல ஆண்டுகளாக திரைப்படங்கள் தணிக்கை துறையால் தணிக்கை செய்யப்பட்டு வெளியிடப்பட்டு வருகிறது. திரை தணிக்கை துறை தன்னாட்சி அதிகாரம் பெற்றது. இது இந்திய அரசின் கட்டுப்பாட்டில் இல்லை. சுயமாக செயல்படும்.

சிறுபிள்ளைத்தனமான அரசியலை விஜய் செய்து வருகிறார். சினிமா ரிலீஸ் ஆகாததற்கு ஒன்றிய அரசின் மீது குற்றம் சுமத்துவது சிறுபிள்ளைத்தனமானது. அரசை பற்றிய புரிதலும் இல்லாமல் தணிக்கை துறை எவ்வாறு செயல்படுகிறது என்ற புரிதலும் இல்லாமல் குற்றஞ்சாட்டி வருகிறார். கடந்த காலங்களில் சிவாஜி, விஜயகாந்த், கமல் இவர்களெல்லாம் சிறந்த திரை நட்சத்திரங்கள். இவர்களை பார்க்க மக்கள் கூட்டம் கூடுவர். அமிதாபச்சனும், ஷாருக்கானும் தமிழகம் வந்தால் கூட மக்கள் கூட்டம் கூடுவர். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: