இரட்டை இலைக்கு ஓட்டு கேட்ட செங்ஸ்

பவானிசாகர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் தவெக வேட்பாளரை ஆதரித்து அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் சத்தியமங்கலம் நகர் பகுதியில் நேற்று வாகன பரப்புரை மேற்கொண்டார். பிரசாரத்தின் போது அவர் பேசுகையில், தவெக தலைவரின் இரட்டை இலை சின்னத்தில் எனப்பேசி விட்டு, மீண்டும் சுதாரித்துக் கொண்டு நான் இரட்டை இலை சின்னத்தில் வாக்கு கேட்டு கேட்டு பழகி விட்டேன்.

எனது தொகுதியில் பிரசாரத்திற்கு போகும்போது ஒரு வயதான மூதாட்டி எட்டு தடவை உனக்கு வாக்களித்து விட்டேன். அடுத்த முறையும் உனக்கு தான் வாக்களிப்பேன் என இரட்டை விரலை காண்பித்தார். நான் இப்போது விசில் சின்னத்தில் நிற்கிறேன் என விளக்கம் அளித்தேன். அதை தொடர்ந்து அவர் விசில் சின்னத்துக்கு ஓட்டு போடுவதாக சொன்னார். இவ்வாறு அவர் பேசியதால் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: