காலை தொட்டு கேட்குறேன்… ஜாதியை பார்த்து ஓட்டு போடுங்க… ‘திண்டுக்கல்’ பிரசாரத்தால் சர்ச்சை

திண்டுக்கல் தொகுதியில் அதிமுக வேட்பாளராக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் போட்டியிடுகிறார். இவர் பல்வேறு பகுதிகளுக்கு சென்று வாக்கு சேகரித்து வருகிறார். காப்பிலியப்பட்டி பகுதியில் இவர் நேற்று பிரசாரத்துக்கு சென்றபோது அப்பகுதியில் உள்ள பெரும்பாலான சமூக மக்கள் உள்ள பகுதியில் திண்டுக்கல் சீனிவாசன் பேசியதாவது: நல்லாட்சி நடைபெறுவதற்கு எடப்பாடியாரை வெற்றி பெற வைக்க வேண்டும்.

நீங்கள் எல்லாம் ஒரு பிரிவினர்(குறிப்பிட்ட ஜாதி மக்களை சொல்கிறார்). ஆனால் அடுத்து முதலமைச்சராக வர இருப்பவர் இன்னொரு பிரிவை சேர்ந்தவர். (ஒரே சமூகம் வேறு பிரிவு) அந்த சமூகத்தை சேர்ந்த ஐயா ஆளப்போகிறார். மகிழ்ச்சியான செய்தி. அதற்காக நாம் அத்தனை பேரும் உழைக்க வேண்டும். ஜாதி மதங்களுக்கு அப்பாற்பட்டு பழனிசாமி முதலமைச்சராக இருந்தபோது சிறப்பான ஆட்சி நடத்தி காட்டினார்.

நல்லாட்சி தருவதற்கு இரட்டை இலைக்கு வாக்களித்து வெற்றி பெற செய்ய உங்களை பாதம் தொட்டு கேட்டு கொள்கிறோம். இவ்வாறு பேசினார். தேர்தல் பிரசாரத்தின்போது ஜாதி, மதங்களின் பெயர்களை சொல்லக் கூடாது என்பது தேர்தல் ஆணையத்தின் உத்தரவு. ஆனால் அதையும் மீறி ஜாதியை பார்த்து ஓட்டு போடுங்க என திண்டுக்கல் சீனிவாசன் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories: