தவெக தலைவர் விஜய் இன்று (12-ம் தேதி) கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரி மைதானத்தில் மதியம் 2 மணி முதல் இரவு 10 மணி வரை பிரசார பொதுக்கூட்டம் நடத்த அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. இந்தப் பொதுக்கூட்டத்திற்காக மாவட்ட காவல்துறை பல்வேறு நிபந்தனைகளுடன் முறையான அனுமதியை வழங்கியிருந்தது.
இதற்காக மேடை மற்றும் பந்தல் அமைக்கும் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியிருந்த நிலையில், திடீரென தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டு, பந்தல் அமைக்கும் பணியை பாதியில் நிறுத்திவிட்டு பொருட்களை வாகனங்களில் எடுத்துச் சென்றனர். இதனால் தவெகவினர் ஏமாற்றம் அடைந்தனர். இ
ந்நிலையில் இன்று (12ம் தேதி) பிற்பகல் 3.30 மணியளவில் குமரி வரும் விஜய், கன்னியாகுமரி அருகே மகாதானபுரம் ரவுண்டானாவில் இருந்து 4 வழி சாலையில் புறப்பட்டு சீரோபாயின்ட் சென்று மீண்டும் அதே சாலையில் மகாதானபுரம் ரவுண்டானா வரை ‘ரோடு ஷோ’ நடத்த இருப்பதாக தவெக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு தேர்தல் ஆணையம், காவல்துறை அதிகாரிகள் தரப்பில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து அந்த பகுதியில் உள்ள மின் கம்பங்களை அடைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
