ஒவ்வொரு கட்சியிலும் துண்டு போட்டு தமிழ்நாட்டில் லாட்டரியை கொண்டு வர லீமா ரோஸ் குடும்பம் தீவிர முயற்சி: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தாக்கு

திருச்சி மாவட்டம் லால்குடி தொகுதி திமுக வேட்பாளர் பாரி வள்ளலை ஆதரித்து ரவுண்டாணா பகுதியில் துணை முதல்வரும், இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் நேற்று பேசியதாவது: கடந்த 2021 தேர்தலில் 17ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளரை வெற்றி பெற செய்தீர்கள். தற்போதைய திமுக வேட்பாளர் பாரி வள்ளலை 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும். நம்முடைய எதிர் வேட்பாளர் யாரென்று உங்களுக்கு தெரியும். ஒரே ஒரு சின்ன எடுத்துக்காட்டு மட்டும் சொல்றேன்.

அவருடைய சொத்து மதிப்பு ரூ.6,000 கோடி, மேலும் அவர் மீது 200க்கும் மேற்பட்ட வழக்குகள் இருக்கு. சுமார் ஆயிரம் கோடி அளவுக்கு சொத்துக்களை வருமான வரித்துறை, அமலாக்கத்துறை, சிபிஐ மற்றும் நீதிமன்றங்கள் எல்லாம் முடக்கி வைத்துள்ளார்கள். அதிமுக வேட்பாளர் லீமா ரோஸ் குடும்பத்தை சேர்ந்தவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு அரசியல் கட்சியில் துண்டு போட்டு வச்சிருக்காங்க.

தமிழ்நாட்டுக்குள் எப்படியாவது லாட்டரி டிக்கெட் லாட்டரி தொழிலை மீண்டும் கொண்டு வந்து தமிழ்நாட்டு மக்களை சீரழிக்குறது தான் அவங்க ஒரே நோக்கமாகும். லால்குடி மக்களை பணத்தால் வென்று விடலாம் என்று தப்பு கணக்கு போட்டு வந்திருக்கிறார்கள். இவ்வாறு அவர் பேசினார்.

* ‘ரெண்டு தொகுதியில போட்டியிடுறவங்க தேர்தல் முடிஞ்சதும் போய்டுவாங்க…’
திருச்சி கிழக்கு தொகுதி திமுக வேட்பாளர் இனிகோ இருதயராஜை ஆதரித்து துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேற்று இரவு மரக்கடை பகுதியில் பேசுகையில், ‘‘சிறுபான்மையினருக்கு பார்த்து பார்த்து நலத்திட்டங்கள் செய்கிறது திமுக. சிறுபான்மையினர் மீது பாஜ தாக்குதல் நடத்தி வருகிறது. சர்ச்களை சேதம் செய்கிறது. தற்போது எப்ஆர்சிஏ சட்டம் அமல்படுத்த உள்ளது. விதிமுறைகளை மீறியதாக கூறி கிறிஸ்தவர்கள் சொத்துக்களை பறிக்க பாஜ திட்டமிட்டுள்ளது.

இதை எதிர்த்து குரல் கொடுத்தது முதல்வர். மற்றவர்களுக்கு இது புரியாது. ஒருசிலர் இரண்டு தொகுதிகளில் போட்டியிடுகின்றனர். அவர்கள் தேர்தல் முடிந்தவுடன் கிளம்பி விடுவார்கள். ஆனால் இனிகோ இருதயராஜ் இந்த தொகுதியில் ஏற்கெனவே வெற்றி பெற்று மக்கள் பணியாற்றியவர். பாஜவின் ‘பி டீமாக’ தவெக செயல்படுகிறது. எனவே, மக்கள் பணியாற்ற இனிகோவை வெற்றிபெற செய்து சட்டமன்றத்துக்கு அனுப்புங்கள். இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories: