22.5.2025 முதல் 28.5.2025 வரை
சாதகங்கள்: மூன்றாம் இடத்தில் இருந்து பல சிரமங்களைத் தந்து கொண்டிருந்த ராசிநாதன் குரு, அங்கிருந்து விலகி அர்த்தாஷ்டம இடமாகிய மிதுன ராசியில் அமர்ந்திருக்கின்றார். முன்பு இருந்த அளவுக்கு கஷ்டங்கள் இப்போது இருக்காது. அதோடு மூன்றாம் இடத்தில் சூரியன் அமர்ந்திருப்பது வெற்றிச் சிந்தனையைத் தரும். அரசாங்க காரியங்களை முடித்துத் தரும். வேலைவாய்ப்பு பிரச்னைகளைத் தீர்த்து வைக்கும். மேலதிகாரிகளின் அன்பு அதிகரிக்கும். வேலை மாற்றங்கள் நன்மை தரும். குடும்பத்தில் சிரமங்கள் படிப்படியாகக் குறைந்து ஆரோக்கியமான திசையை நோக்கி நகரும். பொது வாழ்வில் உள்ளவர்களுக்கு மக்களிடம் செல்வாக்கு அதிகரிக்கும்.
கவனம் தேவை: ஏழரைச் சனியின் ஆதிக்கத்தில் இருக்கிறீர்கள். விரய ராகுவும் பிரச்னைகளைத் தரும் நிலையில்தான் இருக்கின்றார். சில நேரங்களில் மனதை கஷ்டப்படுத்தும் அவமான சம்பவங்களைச் சந்திக்க வேண்டி இருக்கலாம். பிள்ளைகள் பற்றிய பாரம் இருந்து கொண்டே இருக்கும். ஆரோக்கிய குறைவுகள் ஏற்பட்டு மருத்துவ செலவுகளும் திடீரென்று அதிகரிக்கும். கவனமாக இருக்கவும்.
பரிகாரம்: மாற்றுத்திறனாளிகளுக்கு உங்களால் இயன்ற உதவி செய்யவும். நவகிரக சந்நதியில் விளக்கு போடவும். மாலை விளக்கேற்றி வைத்து லட்சுமி நரசிம்மரை மனதில் நினைத்து பால் நிவேதனம் செய்து வாருங்கள். நினைத்தது நிறைவேறும்.