ரிஷபம்

(5.6.2025 முதல் 11.6.2025 வரை)

சாதகங்கள்: இரண்டில் புதன் ஆட்சி. லாபாதிபதி குரு இரண்டில் இருக்கிறார். இவைகள் ராசிக்கு அதிர்ஷ்டம் செய்யும் அமைப்புகள். பாக்கிய ஸ்தானத்தில் சனியும் ராகுவும் பலமாக இணைந்துள்ளனர். 12ல் சுக்கிரன் இருக்கிறார். அன்புக்கும் இன்பத்திற்கும் பஞ்சமில்லை. ஆனால், சுபச் செலவுகள் இருக்கும். ஆபரணங்கள் வாங்குவீர்கள். தொழில் முயற்சிகள் வெற்றி பெறும். பொருள் வரவு இருக்கும். இதுவரை காரியங்களில் இருந்த தடைகள் விலகும். சிலர் புதிய வீடு கட்டி குடியேற வேண்டும் என்று நினைத்த எண்ணம் நிறைவேறும். மேலதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். ஊதிய உயர்வும், பதவி உயர்வும் கிடைக்க வாய்ப்புண்டு. எதுவாக இருந்தாலும், எளிதாக சமாளித்து விடுவீர்கள்.

கவனம்தேவை: ராசியில் சூரியன் இருப்பதால், உடல்நிலையில் உஷ்ணம் சம்பந்தப்பட்ட நோய்கள் வர வாய்ப்பு அதிகம். பித்த நோய் அதிகரிக்கும். அஜீரணம், தலைப் பகுதி, எலும்பில் வலி போன்ற உபாதைகள் ஏற்படலாம். அலைச்சலைக் குறைத்துக் கொள்ள வேண்டும். சிம்ம ராசியில் செவ்வாயும் கேதுவும் இருப்பதாலும் சனியின் பார்வையில் வருவதாலும், தேவையற்ற செலவுகள் அதிகரிக்கும்.

பரிகாரம்: சனிக்கிழமை பெருமாள் கோயிலுக்கும் ஆஞ்சநேயர் கோயிலுக்கும் சென்று நல்லெண்ணெய் தீபம் ஏற்றவும். நன்மைகள் நடக்கும்.