(5.6.2025 முதல் 11.6.2025 வரை)
சாதகங்கள்: களத்திர தொழில் காரக புதன் குருவோடு இணைந்து ராசியை பார்க்கின்றார். தொழில் சிந்தனைகள் மேலோங்கும். தொழில்கள் முன்னேறும், புதிய தொழில்களுக்கான திட்டங்கள் உருவாகும். உத்தியோகத்தில் பதவி உயர்வுக்காக முயற்சி செய்தவர்களுக்கு பலிக்கும் நேரம் இது. ஆறில் சூரியன் அமர்ந்திருப்பதால், அற்புதமான பலன்கள் கிடைக்கும். ஐந்தில்சுக்கிரன் என்பதால் கணவன் மனைவி கருத்து வேறுபாடுகள் அகலும். ஆக்க பூர்வமாகச் சிந்திப்பீர்கள். அதனால் குடும்பத்தில் அமைதி இருக்கும். மூன்றாம் இடத்தில் ராகு சனி இணைந்திருப்பது நல்ல அமைப்பு. சம்பளம், கௌரவம் இவற்றுக்காக நல்ல நிறுவனத்திற்கு மாறலாம் என்று நினைப்பவர்களுக்கு வாய்ப்புகள் கிடைக்கும். திருமணமான தம்பதிகளுக்குக் குழந்தை பாக்கியம் ஏற்படும் கிரக அமைப்புக்கள் உள்ளன.
கவனம் தேவை: சகோதர உறவுகளில் கருத்து வேறுபாடுகள் வரலாம். பூர்வீகச் சொத்து பிரச்னைகள் ஏற்படலாம். சுப விரயங்கள் அதிகரிக்கும். கற்பனையான அனுமான எண்ணங்கள் சிக்கல்களை ஏற்படுத்தி விடும் எதையும் விசாரிக்காமல் உடனடி முடிவுக்கு வர வேண்டாம்.
பரிகாரம்: ஆதிபராசக்தியை வணங்க ஆற்றல் வளரும். வெள்ளிக்கிழமை அருகில் உள்ள அம்மன் கோயிலுக்குச் சென்று தீபம் போடவும்.