மகரம்

22.5.2025 முதல் 28.5.2025 வரை

சாதகங்கள்: ராசிக்கு ஐந்தில் இருந்த குரு ஆறுக்கு நகர்ந்து விட்டாரே என்று கவலைப்பட வேண்டாம். 12க் குரிய குரு ஆறில் சென்று மறைவதால் எதிர்பாராத நன்மைகளைப் பெறுவீர்கள். பகை அழியும். சுக்கிரன் மூன்றில் உச்சம் பெற்று இருப்பதால், பரம சௌக்கியம் பெறுவீர்கள். தேவையற்ற மன அழுத்தங்களில் இருந்து விடுதலை பெற்றால் வெற்றிக்கான வாய்ப்புகள் பிரகாசமாக இருக்கும். எப்பொழுதும் எதிர்மறைச் சிந்தனைகளை நினைக்காதீர்கள். நேர் மறையாகச் சிந்தித்தால் கவலைகள் நீங்கும். ஆறில் புதன் யோகம் தரும் அமைப்பில் இருக்கின்றார். அரசாங்க வேலைகளுக்கும் வெளிநாட்டு வேலைகளுக்கும் முயற்சித்தவர்களுக்கு பலன் கிடைக்கும்.

கவனம் தேவை: பணிச்சுமை அதிகரிக்கும். சகோதர உறவுகளில் கவனம் தேவை. வீடு, மனை வாங்கும் பொழுது சொத்துக்களில் உள்ள வில்லங்கத்தைச் சரிபார்க்கவும். முக்கியஸ்தர்களைப் பகைத்துக் கொள்ள வேண்டாம். மனதில் பட்டதை எல்லாம் வெளிப்படையாகப் பேச வேண்டாம். அஷ்டமாதிபதி சூரியன் ஐந்தில் இருப்பதால் பிள்ளைகள் விஷயத்தில் மன சஞ்சலம் ஏற்படும். குடும்பஸ்தானத்தில் சனி ராகு இணைந்து இருப்பதாலும் செவ்வாய் பார்ப்பதாலும் எப்பொழுதும் ஒரு விவரிக்க முடியாத கவலையும் அச்சமும் மனதை அரிக்கும்.

பரிகாரம்: ஒருமுறை குலதெய்வம் கோயிலுக்குச் சென்று வாருங்கள். ராகுகாலத்தில் விளக்கு போட்டு வணங்குங்கள்.