மகரம்

(29.1.2026 முதல் 4.2.2026 வரை)

சாதகங்கள்: ராசியில் சூரியன் செவ்வாய் சுக்கிரன் இணைந்து இருக்கிறார்கள். சுக லாபாதிபதி எனும் செவ்வாய் ராசியில் உச்சம் பெற்று இருக்கிறார். அவர் ஏழாம் இடத்தைப் பார்ப்பதால், குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டு. மன உறுதியோடு எந்தக் காரியத்தையும் செய்யும் ஆற்றல் அதிகரிக்கும். சொத்துக்கள் பிரச்னை சாதகமாகும். வெளிநாட்டு தகவல் மகிழ்ச்சி அளிக்கும். பயணங்களால் நன்மை உண்டு. புத்திசாலித்தனத்தாலும், முன் யோசனையாலும் பிரச்னைகளை சரியாக கையாள்வீர்கள். வாங்கின கடனும் கொடுக்க வேண்டிய கடனும் பைசலாக வாய்ப்புண்டு. சுபகாரியங்கள் நிகழும். மூன்றில் சனி நெருங்குவதால், தொட்ட காரியங்கள் வெற்றி பெறும். குரு மறைந்திருப்பதால், தேவையற்ற செலவுகள் கட்டுப்படும். குரு தன குடும்ப ராசியைப் பார்ப்பதால், வருமானத்தை அதிகரிக்கும் வழியையும் கொடுப்பார். பதவி மாற்றங்கள் உண்டு.

கவனம் தேவை: அஷ்டமத்தில் கேது இருக்கிறார். கும்பத்தில் ராகுவும் இருக்கிறார். சிந்தனை செயல் எல்லாவற்றிலும் நிதானமாக இருக்கவும். வண்டி வாகனங்களில் செல்லும் பொழுது ஜாக்கிரதையாகச் செல்லவும். வாக்கு கொடுத்து மனக்கஷ்டத்திற்கு ஆளாக வேண்டாம். ஆறில் குரு இருப்பது ஒரு வகையில் நன்மை என்றாலும், சில பொல்லாப்புக்களும் உங்கள் மன நிம்மதியைக் கெடுக்கும். தந்தையுடன் கருத்து வேறுபாடு வேண்டாம். எதிலும் கவனமாகவும், பொறுப்புடனும் செயல்படுங்கள்.

சந்திராஷ்டமம்: 2.2.2026 இரவு 10.48 முதல் 5.2.2026 அதிகாலை 4.20 வரை சந்திராஷ்டமம் உண்டு. பேச்சில் கவனமாக இருக்கவும். வாதப்பிரதிவாதங்களில் ஈடுபடவேண்டாம்.

பரிகாரம்: தட்சிணாமூர்த்தியை வழிபடுங்கள்.