இந்த படத்தை TURM புரொடக்ஷன் ஹவுஸ் சார்பில் எஸ். உமா மகேஸ்வரி தயாரிக்கிறார். பரோல், உடன்பால், பெண்குயின், சேதுபதி போன்ற படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த லிங்கா காதநாயகனாக நடித்துள்ளார். சாரா ஆச்சர் நாயகியாக அறிமுகமாகிறார். மற்றும் திலீபன், ராதாரவி, சாய் தீனா, ஸாரா, வையாபுரி, சரத்ரவி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். சரத் வளையாபதி, பிரேண்டன் சுஷாந்த் ஒளிப்பதிவு. எழுதி இயக்கியுள்ளார் அறிமுக இயக்குனர் பிரசாந்த் ராமன்.
படம் பற்றி இயக்குனர் கூறும்போது, ‘கேங்ஸ்டர் படமென்றாலும் புது டைப் காமெடி கலந்து ஒரு ஃபேமிலி பேக்கேஜாக இந்த படத்தை உருவாக்கி இருக்கிறேன். இதுவரை யாரும் திரையில் பார்த்திராத ஒரு புது அனுபவத்தை தரக்கூடியா கேங்ஸ்டர் படமாக இது இருக்கும்’ என்றார்.